LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையைத் தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்க அமைச்சர் சாமிநாதன் வலியுறுத்தல்.

சென்னை தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் இல.சுப்பிரமணியன், இயக்குநர் ந.அருள், தொழிலாளர் நலத்துறைச் செயலர் குமார் ஜெயந்த், வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முதலில் தமிழில் இடம்பெற வேண்டும், தொடர்ந்து ஆங்கிலத்திலும், அவரவர் தாய் மொழிகளிலும் 5:3:2 என்ற வீதத்தில் அமையப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்குமாறு வணிகர் சங்கங்கள் வலியுறுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறைச் செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.

 

வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வணிக நிறு வனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜாவிடம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் வாயிலாக அனைத்துக் கடைகள், வணிக நிறு வனங்களுக்குப் பெயர்ப் பலகைகளில் முதன்மையாகத் தமிழிலும் பிறகு ஆங்கிலத்திலும் பெயர் இடம் பெறவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுச் செயல்படுத்தி வருவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

by Kumar   on 09 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.