திருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.
சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், இந்தியாவில் 19, 569 தாய் மொழிகள் இருப்பதாக அறியப்படுவதாகவும் அவற்றுள் 121 மொழிகள் பழக்கத்தில் இருந்து குறைந்து வருவதாகவும் கூறினார்.
இதற்கிடையில் ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்த அடையாளத்தை கொண்டுள்ளது என்றும் ஒரு மொழி அழிந்தால் நாம் அதன் தனித்த அடையாளங்களை இழந்து விடுவோம் என்றும் அமைச்சர் .பாண்டியராஜன் கூறினார்.
இதையடுத்து திருவாசத்தில் இடம்பெற்றுள்ள பாடலைப் பாடிய பின் அவர் மேலும் பேசியதாவது: திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல் கடந்த 1350 ஆண்டுகளாக இதே முறையில் தான் பாடப்பட்டு வருகிறது; தமிழ் மொழி அழிவின் விளிம்பில் இல்லை; தமிழ் அழியும் மொழி அல்ல; உள்நாட்டு மொழிகளை பாதுகாத்து வளர்ப்பதில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.
|