|
|||||
எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே நான் போகாத கோயில் இல்லை |
|||||
எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே , நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை. எல்லா மதத்தைச் சார்ந்த கோவிலுக்கும் போனேன். ' சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளர வை ' என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன். ஒரு சாமியும் நான் சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை. தலைக்குமேலே முடி வளர வில்லை. அப்பொழுது கருப்புச் சட்டைப்போட்ட தொண்டர் ஒருவர் வந்து ' என்ன பிரச்சினைங்க ' என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டியதுங்க என்று சொன்னேன். அவர் கேட்டார் - ' நீங்கள் என்ன தொழில் பண்ணுகிறீர்கள் 'என்று. நான் சினிமாவிலே நடிக்கிறேன் என்று சொன்னேன். சினிமாவில் டோப்பாவை வாங்கிவைத்துக் கொள்ளலாமே, தலையில் முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப் படுகிறீர்கள் நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகின்றேன். அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமோ? என்று தெரியவில்லை. தலைக்கு உள்ளே இருக்கிற மூளையை வளரவைக்கும் அப்படின்னு சொல்லி ஒரு சாமிக்கிட்டே அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமிதான் தந்தை பெரியார் என்ற ஈ.வெ. ராமசாமி . பெரியாருடைய புத்தகங்களைப் படித்தேன் - சத்யராஜ் |
|||||
by Swathi on 19 Mar 2014 0 Comments | |||||
Tags: Actor Sathyaraj Hair Loss சத்யராஜ் கோயில் தலைமுடி | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|