2015ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் நாடு நடத்தாது என அந்நாட்டு பிரதமர் ராம்கூலம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, திட்டமிட்டபடி மொரீஷியஸில் 2015ல் நடக்கவேண்டிய காமன்வெல்த் மாநாடு நடைபெறாது. இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணித்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும், அடுத்த மாநாட்டை நடத்த விரும்பும் ஒரு நாட்டின் தலைவர் மாநாடு நடக்கும் நாட்டில் இருக்க வேண்டும் என்பது மரபு. அந்த மரபை மீற விரும்பாததால் வேறு யாராவது அடுத்த மாநாட்டை நடத்தட்டும் என மொரீஷியஸ் கூறியுள்ளார்.
|