தமிழகத்தில் காலியாக உள்ள சார்பு ஆய்வாளர்(சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : சார்பு ஆய்வாளர்
காலியிடங்கள் : 1078*
சம்பளம் : 9300-34800+4800(தர ஊதியம்)
வயது தகுதி : விண்ணப்பதாரர்கள் 01.07.2015 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும், 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (அரசு விதிகளின் படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்)
கல்வித்தகுதி :
பல்கலைகழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பினை முடித்து இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், அறிவிப்புத் தேதியான 08.02.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இணையதளவழி www.tnusrbexams.net மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
அறிவிப்பு வெளியாகும் நாள் : 08.02.2015
இணையதள விண்ணப்பம் துவங்கும் நாள் : 08.02.2015
இணையதள விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.03.2015
எழுத்து தேர்வுக்கான தேதி :
பொது ஒதுக்கீடு : 23.05.2015
காவல்துறைக்கான ஒதுக்கீடு : 24.05.2015
கூடுதல் தகவல்களை அறிய www.tnusrbexams.net/documents/notification_tamil.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
|