LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் கி.மு. 905, 791 ஆண்டுகளைச் சேர்ந்தவை- மத்திய அரசு தகவல்!

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருட்கள்  கி.மு.905,  கி.மு.791 ஆண்டுகளைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்து உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி, தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

இதேபோல், தூத்துக்குடி, சிவகளைபரம்பு பகுதியில் அகழாய்வு நடத்தக்கோரியும் தனி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன்,   சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. 

இந்த மனு மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது,  ‘‘ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி உள்ளது. 

மத்திய தொல்லியல்துறையின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களை கால வயதை அறியும் கார்பன் பரிசோதனைக்கு புளோரிடா, டெல்லிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் 2005-ல் முடிக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அறிக்கையை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய அதிகாரிகள் பிப்ரவரி 25ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து நடைபெற்ற அடுத்தக்கட்ட விசாரணையில் தொல்லியல் துறை அதிகாரிகள் சத்தியபாமா, சத்தியமூர்த்தி ஆகியோர் ஆஜராகி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் பரிசோதனைக்காக டெல்லி மற்றும் புளோரிடாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதிச்சநல்லூர் அகழாய்வு மாதிரி பொருட்களின் கார்பன் பரிசோதனையில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரியவந்துள்ளது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் அளித்தது. 

தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  தொடர்ந்து, கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா?   என்று மத்திய தொல்லியல்துறை ஏப்ரல் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

by Mani Bharathi   on 05 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.