விண்வெளியில் புதிய கொள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த புதிய கோள் பூமியிலிருந்து, 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், வியாழன் கோளைவிட, எட்டு மடங்கு பெரியது என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பால்வெளி அண்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும், கோள்கள் உருவான விதம் குறித்தும், விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆய்வாளர்கள் வான்வெளியில் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாக, 2011ம் ஆண்டு, புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோள் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது, ஜப்பான், நியூசிலாந்து, போலந்து மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளிலிருந்தும், இந்த கோள் தென்பட்டது. இதையடுத்து, புதிய கோள் இருப்பதை உறுதி செய்ய, ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர். இதன் பயனாக, பூமியிலிருந்து, 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில், வியாழன் கோளைவிட, எட்டு மடங்கு பெரிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கோளுக்கு 'எம்.ஓ.- ஏ.2011 - பி.எல்.ஜி. - 322' என பெயரிட்டுள்ள ஆய்வாளர்கள், அதன் சுற்று வட்டப்பாதை குறித்து, ஆராய்ந்து வருகிறார்கள்.
ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறியதாவது: வான்வெளியில் புதிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இக்கோளானது, 'எம்.ஓ.- ஏ.2011 - பி.எல்.ஜி. - 322' என, பெயரிடப்பட்டு உள்ளது. இதன் சுற்று வட்டப்பாதை குறித்து, ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
|