கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
தமிழகம் முழுவதும் 700 திரையரங்குகளுக்கு மேல் வெளியான லிங்கா திரைப்படம் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி, காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. அதன்பிறகுதான் வழக்கமான நேரங்களில் காட்சிகள் இருந்தன. இன்றும் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. நாளையும் இந்தக் காட்சி உண்டு என சில தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லிங்கா திரைப்படம் வெளியான நேற்று ஒருநாளில் மட்டும் ரூ 17 கோடியை தமிழகத்தில் குவித்திருப்பதாக முதல் கட்ட செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ 11 கோடியை எந்திரன் வசூலித்திருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.
ஆந்திராவில் லிங்காவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு முதல் நாளில் ரூ 8 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகத்தில் லிங்கா வசூல் நிலவரம் தெரியவில்லை. வெளிநாடுகளில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியானது. அங்கு படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளதாக விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளார்.
|