தமிழக அரசின் நூலகத் துறைக்கு நூல் வாங்க விண்ணப்பிப்பதற்கான படிவங்களை ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்பவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இதை எல்லா தமிழ் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். நூலகத் துறை உடனடியாக உத்தரவை மாற்றி விண்ணப்பங்களை தமிழில் நிரப்பலாம் என்று அறிவிக்கவேண்டும்.
தற்போது திரு.ஞானி நூலகத் துறையின் தலைவரான கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் இதோ:
schsec@tn.gov.in
அய்யா,
தமிழக பொது நூலகத் துறைக்கு நூல்கள் வாங்குவதற்கு பதிப்பாள்ர்கள் தரவேண்டிய விண்ணப்பங்ளை ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டுமென உத்தரவிட்டுள்ளீர்கள்.
இது தவறான செயலாகும். தமிழ்நாட்டு அரசின் ஆட்சிமொழி தமிழேயாகும். ஆங்கிலம் மத்திய அரசுடன் தொடர்பு கொள்வதற்கான இணைப்புமொழியேயாகும். தமிழக, தமிழ் நூல் பதிப்பாளரை தமிழக அரசுக்கு ஆங்கிலத்தில் விணணப்பிக்கச் சொல்வது தவறான நடைமுறை. உங்கள் அலுவலகத் தேவைகளுக்காக ஆங்கிலத்திலும் தேவையென்றால் அதை உங்கள் அலுவலர்கள் அலுவலகத்தில் செய்துகொள்ளவேண்டுமே தவிர, பதிப்பாளரை தமிழுக்கு பதில் ஆங்கிலத்தில் நிரப்பும்படி சொல்லக் கூடாது. இந்த தவறான உத்தரவை உடனே திரும்பப் பெற்று, விண்ணப்பங்களை தமிழில் நிரப்பவேண்டும் என அறிவிக்கக் கோருகிறேன்.
நன்றி அன்புடன் ஞாநி எழுத்தாளர் பத்திரிகையாளர், உரிமையாளர், ஞானபாநு பதிப்பகம், சென்னை78
நகல்: சி.எம்.செல்லுக்கு.
|