தனது ஆட்சி திறனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தாலும், அதற்கு பொறுபேற்று, பதவி விலகாமல், பதவியை இறுக்கி கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பல நாட்டு அரசியல் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டடம் இடிந்து 54 பேர் பலியான சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஒரு நாட்டின் பிரதமர் பதவி விலகியிருக்கிறார்.
இந்த அதிசய நிகழ்வு நடந்திருப்பது லாட்வியாவில். அந்தப் பிரதமரின் பெயர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ். ரிகா நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டடம் சமீபத்தில் இடிந்து தரை மட்டமானது. இதில் 54 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்துக்குக் காரணம் என்ன என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், வால்டிஸ், நேராக ஜனாதிபதியை சந்தித்து தான் இந்த விபத்துக்குப் பொறுப்பேற்பதாக கூறி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு போய் விட்டார். பிரதமரே பதவி விலகி விட்டதால் அடுத்து நாட்டில் தேர்தலை நடத்த ஜனாதிபதி உத்தரவிடுவார் என்று தெரிகிறது. பிரதமர் திடீரென விலகி விட்டது லாட்வியாவில் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|