கொறத்திக்களி காணிக்காரர் என்னும் மலைவாழ் மக்களான பழங்குடியினரின் கலை. இக்கலை கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, மணலோடை, வில்காரி, புறாவெலி மலை, தேரிமூடு, தெக்காலு மூரி, கீரிப்பாறை கடுதாப்பெட்டி, காயக்கரை, அம்பொடிச்சான் ஆகிய மலைப்பகுதிகளில் மிகக் குறைந்த அளவில் நிகழ்கிறது. காணிக்காரர்கள் வாழும் இன்னொரு பகுதியான பாபநாசம் மலைப்பகுதியில் இக்கலை வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காணிக்காரர்கள் மக்களின் வாழ்வு நிலைகள் மாற்றம் பெற்றதன் காரணமாக அவர்களின் வழக்காறுகள் பல வழக்கிழந்து வருகின்ற வகையில் கொறத்திக்களி கலையும் ஒன்றாகும்.
|