LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீழடி அகழ்வாராய்ச்சியில் வெளிநாட்டினர் அணியும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், வெளிநாட்டினர் அணியும் அகெட் வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015–ம் ஆண்டு முதல் 2017 வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் உறைகிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், தண்ணீர் தொட்டிகள், மருத்துவ குடுவைகள், ஈட்டி, பெண்கள் அணியும் ஆபரணங்கள், கத்தி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பொருட்கள் கிடைத்தன.

அதன் பின்னர் தமிழக அரசு சார்பில் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில தொல்லியல்துறை சார்பில் 4–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன.

இதிலும் செம்பு நாணயங்கள், தாயக்கட்டைகள், கத்தி, உறை கிணறு என மொத்தம் 5,820 பொருட்கள் கிடைத்தன. அதன் பின்னர் ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 5–ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கின. 

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களில் ஏராளமான குழிகள் தோண்டப்பட்டு தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.

மனித எலும்பு துண்டுகள், பாசி மணிகள், பழங்கால எழுத்தாணி உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்தன. இதன் மூலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் விவசாயி முருகேசன் என்பவரது நிலத்தில் தோண்டும் போது 7 உறைகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.  இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். 

மேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணுக்குள் புதைந்திருக்கும் இந்த உறைகளில் எந்தவித விரிசலும் இல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது. அதன் பின்னர் வெயில் பட்டவுடன் அந்த உறையில் விரிசல் ஏற்பட தொடங்குகிறது. 

பழங்காலத்தில் இந்த உறைகளை மிக சிறந்த முறையில் அப்போதைய மக்கள் தயாரித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது.

வெளிநாட்டு மக்கள் அணியும் அகெட் என்று அழைக்கப்படும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த அணிகலன்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகெட் வகை கல்லில் செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. 

இதன் மூலம் பண்டைய தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நல்ல தொடர்பு இருந்துள்ளது என்றும் தெரிய வருகிறது.

 

by Mani Bharathi   on 13 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.