LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தயாராகும் அகல்விளக்குகள்!

கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக மானாமதுரையில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. 

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக இருந்தாலும் மண்பாண்ட தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மண்பாண்ட தொழில் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் சீசனுக்கு தகுந்தாற்போல, பொம்மைகள் முதல் பானைகள் வரை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகள், நவராத்திரிக்கு கொலுபொம்மைகள், கார்த்திகை திருவிழாற்காக அகல் விளக்குகள், பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் மண்சட்டி, கலயம், பானை, மரக்கன்று வளர்க்க பூந்தொட்டிகள் தயார் செய்கின்றனர்.

ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் தயார் செய்யப்படும் மண்பாண்ட பொருட்களை மதுரை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் மண்பாண்டத் தொழில் முழுமையாக பாதிப்புக்கு உள்ளானது. இதனால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி வீட்டில் முடங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் அடிக்கத் துவங்கியுள்ளதையடுத்து, கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உள்ளனர்.

by Mani Bharathi   on 12 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.