|
||||||||
கண் நிறைந்த அழகு |
||||||||
ஒரு வியாபாரிக்கு ஐந்து பெண் பிள்ளைகள். வியாபாரி நன்கு சம்பாதிப்பவர்.ஆகையால், தன் பிள்ளைகளுக்கு எந்தக்குறையும் இல்லாமல் வளர்த்து வந்தார். அவர்கள் விரும்பிக்கேட்பதை தட்டாமல் வாங்கிக் கொடுப்பார்கள். சகோதரிகளில்இளையவள் மட்டும் சற்று நிறம் மங்கி, கருப்பாக அழகில்லாதவள் போல் தோன்றுவாள். மற்ற மூத்த நான்கு சகோதரிகளும் நல்ல சிவப்புடன் அழகாகத் தோன்றினார்கள். இது இவர்களுக்கு மனதில் கர்வத்தை வளர்த்தது. இவர்கள் எப்பொழுதும் தங்களை சிங்காரித்துக் கொண்டு , கண்ணாடி முன் நிற்பதே வழக்கமாகி விட்டது. தப்பித் தவறி தன்னை அழகுபடுத்திக் கொள்ள இளையவள் கண்ணாடி முன் நின்று விட்டால் மூத்த சகோதரிகள் ரசனையில்லாத வார்த்தைகளால் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் .இதனால் இளையவள் தனக்குள் அழுது வேதனைப்படுவாள். இளையவள் மூத்தவர்களைக் காட்டிலும் இரக்க சிந்தனையும் ,உதவும் குணமும் கொண்டவள் . மூத்த பெண்களின் குணம் இளையவளுக்கு நேர் எதிர்மாரானது.அவர்கள் தங்கள் அழகில் கர்வம் கொண்டு வேறு எவரையும் மதிக்க மாட்டார்கள்.எனவே மக்களிடம் அவர்களுக்கு நல்ல பெயரே இல்லை. ஏழைக்கு அன்பு காட்டும் இளையவளை மக்கள் தர்மதேவதை என்று போற்றுவார்கள்.இவ்வளவு ஈகைக்குணம் சிறந்த பண்புகள் இருந்தும், புற அழகு போதவில்லையே.அதனால் தானே சகோதரிகள் நம்மை வெறுக்கிறார்கள் என நினைத்தும் வேதனைப்படுவாள். இளையவளின் வேதனையைப் பெற்றோர்கள் நன்கு புரிந்து கொண்டனர். ஒரு நாள் இளையவளை அழைத்து "நிலா இப்படி உட்கார்" என்றனர். அவளும் பெற்றோர்களிடம் ஆசையுடன் அமர்ந்தாள் . "அம்மா உன் மூத்த சகோதரிகள் உன்னை மதிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் .அதற்காக கவலைப்படாதே.புற அழகைக் காட்டிலும் உன் மன அழகு மிகவும் அற்புதமானது அது தான் அனைவரையும் கவரும் காந்தம் போன்றது. எக்காலமும் உன் அழகுதான் வளரும், நிரந்தரமாகவும் இருக்கும், இவர்களின் புறத்தோற்றம் காலத்தால் மாறி விடும்.அதை உணர்ந்து கொள் போதும்", என ஆறுதல் கூறினார்கள். |
||||||||
by Swathi on 25 Apr 2014 1 Comments | ||||||||
Tags: கண் நிறைந்த அழகு அழகு Kan Niraintha Alagu | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|