புலம்பெயர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்த தமிழ்ப் பெண் தாமரைச்செல்வன் கீர்த்தனா சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். சுவிஸ் பிரெஞ்சு பேசும் மாநிலங்களுக்கிடையில் நடந்த கராத்தே சுற்றுப்போட்டியில் 2008, 2011ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துக் கொண்டுள்ளார். உயர் தேசிய வர்த்தக டிப்ளோமா, இளநிலை முகாமைத்துவக் கணக்கியல்மானி என்ற பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். அத்துடன் தனது திறமையால் ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரியாக இன்று வலம் வருகின்றார். இது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமிதம் ஆகும்.
|