LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலகத் தமிழர் பொருளாதார மாநாடு டிசம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது...

ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார  மாநாடு,  டிசம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.  இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் கூறியதாவது: 

உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, 2009ல் துவங்கி, பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.  இதுவரை ஐந்து மாநாடுகள் அந்தந்த நகரத்துடன் இணைந்து உச்சி மாநாடாகவும் நடத்தப்பட்டது. ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு டிசம்பர் 28 முதல் 30 தேதி வரை மூன்று நாட்கள்  சென்னை, லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நடந்தது.  

இந்த மாநாட்டில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.கஜேந்திர  சிங் ஷெகாவத், தமிழகத் தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் உட்படப் பலர் இந்தியாவிலிருந்தும் , உலக நாடுகளிலிருந்தும் பங்கேற்கிறார்கள்.  இம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், பங்கேற்கின்றனர். 

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று விருதுகள் வழங்குகிறார். இம்மாநாட்டில் தெலுங்கானா கவர்னர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்  கலந்துகொண்டார். இம்மாநாடு வணிகம் பெருகவும், முதலீடுகளை ஈர்க்கவும் நடைபெற்றது.

மொரீசியர் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். பரமசிவம் பிள்ளை வையாபுரி, தென்னாப்பிரிக்காவின் அமைச்சர் திரு.இரவிப்பிள்ளை , நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெகத் ரட்சகன் , இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் திரு.டி .எஸ்.திருமூர்த்தி , லீ மெரிடியன் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி , அயல்நாட்டுத் தூதுவர் திரு.ப.மகாலிங்கம் , டாக்டர் ஆர்.சீத்தாராமன் (தலைவர்,தோகா வங்கி) , திரு.வள்ளிநாயகம் உள்ளிட்ட பல நீதிபதிகள் என்று பல துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் 130க்கும் மேற்பட்ட உரைகள் இடம்பெற்றன. பல்வேறு துறையினரும் தங்களுக்குள் தொழில்  முதலீடுகள், வணிகத்தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக இம்மாநாடு அமைந்தது. 

by Swathi   on 21 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.