அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக விஞ்ஞானியும், அரிசோனா பல்கலைக்கழகத்தின் தலைவருமான சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். இதற்குத் தமிழர்கள் வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துவருகிறார்கள்.
கலாநிதி சேதுராமன் பஞ்சநாதன் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், சென்னை பல்கலைக்கழகம், விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் சென்னை தொழில்நுட்ப அறிவியல் பிரிவு, பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் உள்ளிட்டவற்றில் உயர் கல்வியைப் பயின்றுள்ளார். கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை முடித்துப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|