இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டெய்லிங் நடால் மாவட்டத்தில் உள்ள மவுரா சலாதி கிராமத்தில் இஸ்லாமிக் உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அந்த பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 11 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், 15-க்கு மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர் என்றும் பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
|