|
|||||
இந்தோனேஷிய நிலநடுக்கம்: இந்திய அரசு சார்பில் உதவி! |
|||||
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டோருக்கு இந்திய அரசு சார்பில் உதவிப்பொருட்கள் அனுப்பப்பட்டது. இந்தோனேஷியாவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சிறிது நேரத்தில் சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக கடலோர குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சடலங்களை பராமரிப்பது கடினம் என்பதாலும், நீண்ட நாட்கள் அடக்கம் செய்யப்படாவிட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாலும், ஒரே இடத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சுமார் ஆயிரம் சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. பூகம்பம் மற்றும் சுனாமியால் இந்தோனேசியாவில் ஏரளாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தோனேசிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, இந்தோனேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று உறுதியளித்துள்ளார். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து குலனாமு சர்வதேச விமான நிலையத்திற்கு நிவாரணப் பொருட்களுடன் விமானப்படை விமானம் ஒன்றின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து நிலநடுக்கம் நேரிட்ட பாலோ விமான நிலையத்திற்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் மற்றொரு விமானத்தில் 37 மருத்துவர்கள் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். மேலும் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் 3 கப்பல்களும் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
|||||
by Mani Bharathi on 03 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|