|
|||||
ஈரானிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கும் முடிவு எந்த வகையிலும் உதவாது.. |
|||||
ஈரானிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கும் முடிவு எந்த வகையிலும் உதவாது என அமெரிக்கா மிரட்டும் தொனியில் கூறியுள்ளது. அமெரிக்க அதி்பர் டொனால்ட் டிரம்ப் எடுத்த திடீர் முடிவின் காரணமாக, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா விலகியது. தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தது. மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் நவம்பர் 4ம் தேதிக்குப் பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வரும் இந்தியா, எத்தகைய முடிவை எடுக்கும் என்று உலக நாடுகள் உற்றுநோக்கி வந்தன. ஆனால், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இதனால், இந்தியாவின் மீதும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி பிரைன் ஹூக் இந்தியா வருகிறார். அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நவ்வட் கூறியதாவது: ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்து இருக்கும் அனைத்து நாடுகள் மீதான பொருளாதார தடைகள் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும். பொருளாதார தடைகளை செயல்படுத்துவதில் அமெரிக்கா முனைப்புடன் உள்ளது. ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் முடிவு, எந்த வகையிலும் இந்தியா-அமெரிக்கா உறவில் உதவப்போவது கிடையாது. இந்தியாவின் மீதான தடைகள் குறித்து மிக கவனமாக மீண்டும் பரிசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|