|
|||||
அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்படுமாம்: வர்த்தகச் சந்தையில் பரபரப்பு! |
|||||
அமெரிக்காவினெ கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வர்த்தக சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரம் 74 ரூபாய் வரை சரிவை சந்தித்தது. இந்த சரிவு இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் மேலும் ஒரு சறுக்கலாக இந்திய ரூபாயை கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்க ட்ரம்ப் அரசு பரிந்துரைத்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்திய ரூபாயை கண்காணிப்பு பட்டியலில் இணைத்ததாக கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கருவூலத் துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை தனது கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. இந்தப் பட்டியலில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகளின் பணங்கள் மட்டும் இந்த பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும். ஜி.எஸ்.டி. வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப் போவதாக முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை கணக்கிட்டு, ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம் என்று தெரிவித்து உள்ளனர். அதன் பின்னர் அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. |
|||||
by Mani Bharathi on 19 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|