லட்சகணக்கான மக்களை வறுமையிலிருந்து இந்தியா மீட்டுள்ளதாக ஐ. நா. சபை கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டி பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ. நா. சபையின் 73-வது கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களிடையே ட்ரம்ப் பேசும்போது, "பல லட்சணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்ட வெற்றிகரமான நாடாக இந்தியா உள்ளது" என்றார்.
அணுஆயுத சோதனைகள் தொடர்பான விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததில் எந்த தவறும் இல்லை என்றும் ட்ரம்ப் பேசினார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்து வரும் தொடர் பொருளாதாரத் தடைகளை மீறி அந்நாட்டுடன் கச்சா எண்ணெய் போன்ற வர்த்தகத்தில் ஈடுபட ஐந்து நாடுகள் முடிவு செய்துள்ளன.
|