LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஐ.நா.வின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கில் இந்தியாவின் வெற்றி உலகின் அடையாளத்தை மாற்றும்: ஐ.நா.சபையில் தலைவர் பேச்சு!

‘‘ஐ.நாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கில் இந்தியா பெறும் வெற்றி, உலகின் அடையாளத்தை மாற்றும்’’ என ஐ.நா பொதுச் சபை தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பினோசா கூறியுள்ளார்.

 ஐ.நா பொதுச் சபையில் அதன் தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பினோசா பேசியதாவது: 
எனது தலைமையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதை பெரிதும் எதிர்பார்க்கிறேன். ஐ.நா.வின் பல்வேறு திட்டங்களில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. ஐ.நா.வின் இணக்கமான நாடாக இந்தியா விளங்குகிறது.

 2030ம் ஆண்டில் ஐ.நா.வின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கை அடைவதில் இந்தியா பெறும் வெற்றி, உலகின் அடையாளத்தையே  மாற்றும். இது 130 கோடி மக்கள் சம்பந்தப்பட்டது. 

ஐ.நா.வின் அமைதிப் படை பணியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. அமைதிப் பணியில் பெண்களை ஈடுபடுத்தும் விஷயத்திலும் இந்தியா சிறந்த முறையை பின்பற்றுகிறது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிக்காக இந்திய பிரதமர் மோடிக்கு விருது அளிக்கப்பட்டு உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

பருவநிலை மாற்றத்திலும் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. இருந்தாலும், துப்புரவு மற்றும் நகரமயமாக்கல் போன்றவற்றில் இந்தியா பல சவால்களை சந்திக்கிறது.

இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு கிராமங்கள் அதிகமாக உள்ளன. மக்களுக்குத் தேவையான சேவைகளை அளிப்பது சவாலான பணி. சரியாக திட்டமிட்டால்தான், சவால்களை எதிர்கொள்ள முடியும்.

இந்தியாவில் ஆரம்பம் முதலே தீவிரமான சிவில் சொசைட்டி, வலுவான ஜனநாயகம், மக்களின் தீவிர பங்களிப்பு இருந்து வருகிறது. அதனால் பல விஷயங்கள் சாதகமாக நடக்கின்றன. எனது 7 முன்னுரிமைத் திட்டப் பணிகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன். இந்தியாவை ஆக்கப்பூர்வமான, நம்பிக்கையான நாடாக நான் பார்க்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.