வரும் 2050 ம் ஆண்டில், மக்கள் தொகை பெருக்கத்தில், சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் வகிக்கும் என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக மக்கள் தொகை பெருக்கம் குறித்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஆய்வாளர்கள், ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையின்படி, தற்போது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவின் தற்போதைய மக்கள் தொகை, 130 கோடியாக உள்ளது. இப்பட்டியலில், 120 கோடி மக்கள் தொகையுடன், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகை, 31 கோடியாகவும், இந்தோனேசியாவின் மக்கள் தொகை, 25 கோடியாகவும் உள்ளன. அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால், 2050ல் உலக மக்கள் தொகையின் அளவு, 970 கோடியாக உயரும். அப்போது, சீனாவின் மக்கள் தொகையை விட, இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் உயர்ந்து, 160 கோடியாக பதிவாகும். இதன் மூலம், 2050ல், இந்தியா, உலக மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|