LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் 38 தொகுதியிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்!

தமிழகத்தில் 38  தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள். புதுச்சேரி மக்களவைத் தொகுதி. மற்றும் இடைத்தேர்தலாக 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 

மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

அதேபோல் இடைத்தேர்தல் நடந்த 18 சட்டமன்ற தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார். 

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 86.96, குறைந்தபட்சம் சாத்தூரில் 60.87 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 6 மணி நிலவரப்படி 78.23% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72.67% வாக்குகள் பதிவாகியுள்ளது. 6 மணி நிலவரப்படி மதுரை மக்களவை தொகுதியில் 60.12% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.

வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக எந்த தகவலும் இல்லாத வகையில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது என்று கூறினார்.

இடைத்தேர்தல் வாக்கு சதவீத விவரம் வருமாறு:

பூந்தமல்லி - 79.14 பெரம்பூர் - 61.06 திருப்போரூர் - 81.05 சோளிங்கர் - 79.63 குடியாத்தம் - 81.79 ஆம்பூர் - 76.35 ஓசூர் - 71.29 பாப்பிரெட்டிப்பட்டி - 83.31 அரூர் - 86.96 நிலக்கோட்டை - 85.50 திருவாரூர் - 77.38 தஞ்சை - 66.10 மானாமதுரை - 71.22 ஆண்டிபட்டி - 75.19 பெரியகுளம் - 64.89 சாத்தூர் - 60.87 பரமக்குடி - 71.69 விளாத்திகுளம் 78.06 

தமிழகத்தில்  காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்குகளை செலுத்தினார். சென்னை மாவட்டம் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 144 பேர் முதல் முறையாக வாக்களித்தனர்.

தமிழகத்தில் மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

by Mani Bharathi   on 19 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.