LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை வரவேற்கிறேன்- அதிபர் டிரம்ப்!

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை வரவேற்கிறேன் என அதிபர் டிரம்ப் பேசினார்.

அமெரிக்க பாராளுமன்ற மரபுகளின்படி ஆண்டுதோறும் அந்நாட்டு பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர்கள் பேசுவது வழக்கம். 

ஆனால் மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்க எம்.பி.க்கள் அனுமதி அளிக்காததால் இந்த ஆண்டின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற மாட்டேன் என அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுமூகநிலை திரும்பியுள்ளதால் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். அப்போது பழிவாங்கும் அரசியலை ஒதுக்க வேண்டும் என எம்பி.,க்களிடம் கேட்டுக் கொண்டார். 

சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை, மனித கடத்தல்கள் ஆகியவை அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளது என்பதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் இது. 

கடந்த காலங்களில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள் ஓட்டளித்தனர். எனினும் இதுவரை முறையான சுவர் கட்டப்படவில்லை, ஆனால் நான் அதை கட்டுவேன். 

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை நான் வரவேற்கிறேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு வகைகளில் அவர்கள் உதவிகரமாக இருந்து வருகின்றனர்.

நமது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாத ஒரு குடியுரிமைத்துறை கொள்கையை நாம் வகுத்தாக வேண்டும்.

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறிய பல லட்சக்கணக்கான பேரையும் சேர்த்துத்தான் நான் நமது நாட்டு மக்கள் என்று குறிப்பிடுகிறேன் என்று கூறி உள்ளார். 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான எனது உறவு நன்றாக உள்ளதால் பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்., 27, 28 ம் தேதிகளில் வியட்நாமில் மீண்டும் சந்திப்பு நடைபெற உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

by Mani Bharathi   on 07 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.