ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையை சாத்தியமாக்கிய நம்பிக்கையைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள பல நாடுகளின் பெரிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவ ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள்அனுமதியளித்துள்ள நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநாகத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது .
அக்டோபர், 2018 இம்மாதம் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முதற்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாயை நேற்று அங்குள்ள தமிழர்கள் வழங்கியுள்ளனர். ``ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க மொத்தம் இந்திய ரூபாயில் 42 கோடி தேவைப்படுகிறது.
இதில் பாதித்தொகையான 21 கோடி ரூபாயை டெக்சாஸ் நாடு வழங்குகிறது. மீதமுள்ள 21 கோடி ரூபாயைச் சர்வதேச அளவில் அனைத்து தமிழர்களிடமும் திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட நிதியை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கி முன்னெடுத்துள்ளனர்” என ஹூஸ்டனிலிருந்து இதன் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை தெரிவித்தனர்.
|