|
|||||
5 லட்சம் வண்ண விளக்குகளை வைத்து அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது !! |
|||||
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கிறிஸ்துவர்கள் தங்களது வீடுகளில் நட்சத்திரங்கள் கட்டி, கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்கள் வைத்து கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தங்களது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட்டத்தோடு நிறுத்தாமல், சாதனையாக மாற்றி வருகிறது ஆஸ்திரேலியவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று.
ஆஸ்திரேலியாவில் உள்ள கன்பெர்ரா நகரில் வாழ்ந்து வருபவர் டேவிட் ரிச்சர்ட்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது குடும்பத்தாரின் உதவியுடன் 3 லட்சத்து 31 ஆயிரத்து 38 கண்கவரும் வண்ண விளக்குகளை தனது வீட்டு தோட்டத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரங்களில் அமைத்து அலங்காரம் செய்தார். இதன் மூலம் அதிக விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தார் என்ற சாதனையை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
ஆனால், கடந்தாண்டு, டேவிட்டின் சாதனையை முறியடிக்கும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இன்னொருவர் 3 லட்சத்து 46 ஆயிரத்து 283 வண்ண விளக்குகள் மூலம் தனது கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து கின்னஸில் இடம் பெற்றார்.
இந்நிலையில், இந்தாண்டு மீண்டும் தனது கிறிஸ்துமஸ் மரங்களை 5 லட்சத்து 2 ஆயிரத்து 165 வண்ண விளக்குகள் மூலம் அலங்கரித்துள்ளார் டேவிட் கடந்தாண்டு தவற விட்ட தனது கின்னஸ் சாதனையை மீண்டும் தன் வசப் படுத்தியுள்ளார். |
|||||
by Swathi on 27 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|