தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடு தொடர்கதையாகி வரும் நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, 'பத்மாவதி' என்ற நிறுவனத்துடன், அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளின் கீழ் செயல்படும், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, 31 அரசு மருத்துவமனைகளில், டிசம்பர் 20 முதல், இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்படி, 4,572 துப்புரவு ஊழியர், 1,322 பாதுகாவலர், 345 மேற்பார்வையாளர்கள் என இந்த நிறுவனம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக மாவட்ட மருத்துவமனைகள், முக்கிய தாலுகா மருத்துவமனைகள் என, 48 மருத்துவமனைகளில், தனியார் நிறுவன பராமரிப்பு, அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|