LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்!

ஆஸ்திரேலியாவில் காந்தி சிலையை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் சென்றார். வியட்நாம் பயணத்தை முடித்த பின் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளார். 

மகாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார்.விழாவில், ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், இந்திய வம்சாவளியினர் பலர் பங்கேற்றனர்.

விழாவில், ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

மகாத்மா காந்தியின் அஹிம்சை மற்றும் அமைதி தத்துவங்கள், இப்போதும் தேவையாக உள்ளன. உலகில் அமைதி நிலவ, காந்தியின் அஹிம்சை கொள்கையை பின்பற்றுவது தான், ஒரே வழி. மகாத்மா காந்தி, இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகுக்கே பொதுவானவர். அவரது சிலையை, ஆஸ்திரேலியாவில் திறந்து வைத்ததை, எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

ஆஸ்திரேலியாவில், பல தரப்பட்ட கலாசாரங்கள், நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதை, காந்தி எப்போதும் ஆதரித்து வந்தார்.இவ்வாறு அவர் பேசினார்.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.