பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும் ராணுவ படை தளபதியுமான பர்வேஸ் முஷாரப்பிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமி்ன் வழங்கியுள்ளது இதனையடுத்து அவர் துபாய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் பதவி வகித்த போது, கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி பலுச் தேசியவாத தலைவர் நவாப் அக்பர் புக்தி ஒரு குகையில் வைத்து கொல்லப்பட்டார். இவர் அங்கு மாகாண சுயாட்சிக்காக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தியவர் ஆவார். இவர் கொல்லப்பட்டபோது அங்கு பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. முஸாரப் அதிபர் பதவியை விட்டு விலகிய பி்னனர் வெளி நாடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தானாகவே முன்வந்து தன்மீதான வழக்குகளின் அடிப்படையில் நேரில் ஆஜரானார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டார். அக்பர் புக்தி கொலை வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி பலுசிஸ்தான் ஐகோர்ட்டில் முஷாரப் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் முஷாரப் சார்பில் மேல்-முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முஷாரப்புக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் துபாய்க்கு செல்ல திட்டமி்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் மீதான இரண்டு வழக்குகளிலும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|