LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் 2 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி

வெளிநாட்டு மாணவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த கனடா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2024 முதல் கனடாவுக்குப் படிக்க செல்ல விண்ணப்பம் செய்வோர் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.12.7 லட்சம் இருப்பு வைத்துள்ளதைக் காட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்திய மாணவர்கள் கவலை

 

இந்தத் தொகை முன்பு ரூ.6.14 லட்சமாக இருந்தது. இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் 2 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கனடா குடிவரவுத்துறை அமைச்சர் மார்க் மில்லர், “அதிகக் கட்டணம் வசூலித்து, போதிய வசதிகளற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும் கனடாவில் வெளிநாட்டினர் வரவு அதிகரித்துள்ளதால் தங்குமிடங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

 

சர்வதேச மாணவர்களுக்கான விசா 35 சதவீதம் குறைக்கப்படும். வெளிநாட்டு மாணவர்கள் 2 ஆண்டுகள் மட்டுமே கனடாவில் தங்க அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு 3,64,000 சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

கனடா அரசின் இந்த அறிவிப்பால் அந்நாட்டுக்குப் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.

by Kumar   on 25 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.