LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் பாராட்டு!

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் பாராட்டினார்.

தமிழ்ச்சங்கங்கள் பல்வேறு பகுதிகளில் தமிழுக்காகச் சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றன. தமிழ் மொழி பேசாத மாநிலங்களில் கூட தமிழ்ச் சங்கங்கள் தமிழ் வளர்க்கும் அரும்பணி செய்து வருகின்றன.

அந்த வகையில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கமும் 1963-ல் தொடங்கப்பட்டு மிகவும் சிறந்து விளங்கி வருகின்றது. தமிழ்ப் பணிகளையும், சமூகநலப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இச்சங்கத்தை தமிழக அரசு, மிகச் சிறந்த தமிழ்ச் சங்கம் எனப் பாராட்டி விருதும் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தத் தமிழ்ச் சங்கம் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. சங்க நூலகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள நூல்கள் இடம்பெற்று உள்ளன.

தமிழ்ச்சங்கம் சார்பில், மாதந்தோறும் கவியரங்கம், கதையரங்கம், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை நடத்தி வருவதுடன், 'கேரளத் தமிழ்' என்னும் மாத இதழும் தொடர்ந்து 40 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டு இருக்கிறது.

பாரதி விழா, பொங்கல் விழா எனப் பல விழாக்களை நடத்தி வருவதும் தமிழ்ச்சங்கச் சிறப்பு ஆகும். நிலா விருந்து என்னும் நிகழ்வு ஆண்டு தோறும் நடக்கிறது. குடும்பத்துடன் இன்னிசை கேட்டு, இரவு உணவை உட்கொள்ளும் நிகழ்வு சிறப்பானது ஆகும். இதில் அரசியல்வாதிகள், இலக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுச் சிறப்பிப்பது ஆண்டு தோறும் நடக்கிறது.

பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை இச்சங்கத்திற்கு உண்டு.அண்மையில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

இதில் சங்கப் பொதுச் செயலாளர் மு.முத்துராமன், துணைத் தலைவர் சூரியகுமாரி, தமிழகத்தில் இருந்து அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்  முனைவர் கணநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர்  முனைவர் கு.சிதம்பரம், கலந்தாய்வில் கலந்து கொண்டு,  சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்துப் பாராட்டிப் பேசினார்.

by Mani Bharathi   on 30 May 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.