சீனாவை சேர்ந்த, ஹீ எய்டை என்ற ஐந்து வயது சிறுவன், சுமார் அரை மணிநேரம், விமானத்தை இயக்கி சாதனை புரிந்துள்ளான்.
சீனாவின், பீஜிங் மாகனத்தை சேர்ந்தவர், ஹீ லீசெங், விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உடையவரான,லீசெங், தனது நான்கு வயது மகன், ஹீ எய்டை விமானி ஆக்கி பார்க்க வேண்டும் என ஆசை பட்டார். இதற்காக, அவர் ஹீ எய்டை, பீஜிங்கில் உள்ள தனியார் விமான பைலட் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைத்தத்தார். மிகச் சிறிய வயதில், பயமின்றி, விமானத்தை இயக்குவதில் பயிற்சி பெற்ற, ஹீ எய்டு, ஓராண்டு பயிற்சிக்குப் பின், தலை சிறந்த விமானியைப் போல், மிக தைரியமாக விமானத்தை தனியாக இயக்க கற்றுக்கொண்டான். சிறுவனின் தைரியத்தையும், சாதனையையும் உலகறியச் செய்யும் விதமாக, விமான பயிற்சி நிறுவனமும், ஹீ லீசெங்கும் இணைந்து பார்வையாளர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் பீஜிங்கில் உள்ள, தேசிய குழந்தைகள் பூங்காவில், பொதுமக்கள் முன்னிலையில், ஹீ எய்டு தனியாக விமானத்தை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்கள் முன்னிலையில், 100 கிலோ எடை கொண்ட இலகு ரக விமானத்தில் ஏறி அமர்ந்த, ஹீ எய்டு, சர்வ சாதாரணமாக விமானத்தை இயக்கி வானில் பறந்தான். அனைவரும் இதை வியப்புடன் கண்டு களித்தனர். தொடர்ந்து, 35 நிமிடங்கள் வானில் பறந்த சிறுவன், பத்திரமாக தரையிறங்கினான். இதன் மூலம், மிகக் குறைந்த வயதில் விமானத்தை இயக்கிய பெருமையை, ஹீ எய்டு பெற்றுள்ளான். விரைவில், இந்த சாதனை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், இடம் பெற போவதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
|