LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செயற்கை மழை பொழிய குட்டி விமானம் கண்டுபிடித்து உடுமலை மாணவன் திருச்செல்வன் சாதனை!

செயற்கை மழை பொழிய  உதவும் குட்டி விமானம் கண்டுபிடித்து உடுமலை பள்ளி மாணவன் திருவருட்செல்வன் சாதனை படைத்து உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்கேஆர்., கிரிக்ஸ் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர் திருவருட்செல்வன். இவரது தந்தை எலக்ட்ரீசியனாக உள்ளார். சிறு வயதில் இருந்த ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்ட இந்த மாணவர், தற்போது செயற்கை மழை பொழிய வைக்க உதவும் ஆளில்லா விமானம் கண்டுபிடித்து உள்ளார். 

ஏரோனாட்டிகல் பொறியாளர்கள் கண்டுபிடிக்கக் கூடிய, ஆளில்லா விமானத்தை 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்தது தான் சாதனையே. 

இது குறித்து மாணவன் திருவருட்செல்வன் கூறியதாவது:

இன்றைய காலகட்டத்தில் இயற்கை சீற்றம் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் பூமி வெப்பம் அடைகிறது. ஆலைகளில் இருந்து வெளி வரும் கழிவுகள் மற்றும் கரும்புகையால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடுகிறது. இந்த நிலையில், ஹெலிகேம் மாதிரி ஆளில்லா விமானம் ஒன்று உருவாக்கி, பேட்டரி பவர் மூலம் பறக்கக் கூடிய, மழை இல்லாத காலங்களில் இக்கருவியை பயன்படுத்தி செயற்கை மழையைப் பொழிய வைக்க முடியும். 

கேடு விளைவிக்காத பொருட்களைக்  கொண்டு, இந்த ஆளில்லாத விமானம் மூலம் குறிப்பிட்ட தூரத்துக்கு அனுப்பி பொருட்களை மேகங்கள் மீது தூவினால் மழை பெய்யும். தற்போது 400 அடி உயரம் வரை செல்லும் வகையில் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் ஆதரவும்,போதுமான நிதியும் கிடைத்தால் இதைவிட பெரிய விமானம் தயாரிக்க முடியும். 

இவ்வாறு திருவருட்செல்வன் கூறினார்.

மாணவனின் இந்த கண்டுபிடிப்பு பல மாவட்டங்களில் நடந்த அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசைப் பெற்று உள்ளது.  27ந்தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவன் திருவருட்செல்வனுக்கு அழைப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை மாணவன் திருவருட்செல்வனை, பள்ளி தாளாளர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

by Mani Bharathi   on 27 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.