|
|||||
உலகிலேயே மிகப் பரபரப்பான விமான நிலைய பட்டியலில் முதலிடம் பிடித்தது துபாய் சர்வதேச விமான நிலையம் |
|||||
சர்வதேச விமானப் பயணிகளின் வரத்தை அடிப்படையாகக் கொண்டு 2023-ம் ஆண்டில் சிறந்த 10 பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களுக்கான வருடாந்திரத் தரவரிசை வெளியானது.
இந்த பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சாங்கி விமான நிலையம் சுமார் 36.1 பத்து லட்சம் பயணிகள் வரத்தை எட்டியது, 2022 உடன் ஒப்பிடும்போது இது 66% அதிகம் ஆகும்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை துபாய் சர்வதேச விமான நிலையம் பெற்றது.
அங்குச் சுமார் 57 மில்லியன் பயணிகள் வந்து சென்றதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 25% அதிகம் ஆகும்.
சுமார் 47 மில்லியன் பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும், 37.2 மில்லியன் பயணிகளுடன் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் (AMS) மூன்றாவது பரபரப்பான சர்வதேச விமான நிலையமாகத் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. |
|||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|