|
|||||
திருக்குறள் முனைவர். அழகப்பா இராம்மோகன்" நினைவு விருது வழங்க உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் கோரிக்கை |
|||||
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை "திருக்குறள் முனைவர். அழகப்பா இராம்மோகன்" நினைவு விருது ஒன்றினைத் திருக்குறள் வளர்ச்சியில் ஈடுபடும் உலகத் தமிழர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்க உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தமிழர்களில் திருக்குறளுக்காகத் தொடர்ந்து சமரசமில்லாமல் உழைத்தவர் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையை (www.kural.org) நிறுவி, உலகத் தரம் வாய்ந்த பைபிள் அச்சகத்தில் திருக்குறளைச் சிறப்புத் தாளில் அச்சடித்துக் கொண்டுவந்த முனைவர். அழகப்பா இராம்மோகன் . இவரது பெயரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை "திருக்குறள் முனைவர். அழகப்பா இராம்மோகன்" நினைவு விருது ஒன்றினைத் திருக்குறள் வளர்ச்சியில் ஈடுபடும் உலகத் தமிழர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் பேரவைக்குப் பரிந்துரைக்கிறேன். அவர்களின் நினைவைப் போற்றவேண்டும் அமெரிக்க மண்ணில் வாழ்ந்து மறைந்த குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்த தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் இவ்விருதுகள் உலகத் தமிழர்களுக்கு வழங்கப்படுவது சிறப்பு. விருதுக்குத் தகுதியானவர்களை அமெரிக்காவில் மட்டும் சுருங்கினால் , ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எவரும் பெரிய பங்களிப்பு செய்யாத நிலையில் யாரோ ஒருவருக்குக் கொடுத்தாகவேண்டும் என்ற நிலை வரலாம். எனவே உலகெங்கும் பார்வையை விரிவுபடுத்தலாம். பிற நாடுகளும் அவர்கள் மண்ணில் வாழ்ந்து தமிழ் மொழி , கலை , பண்பாடு , வாழ்வியலுக்காக அர்ப்பணித்து மறைந்தவர்களைப் போற்றும் வகையில் அவர்கள் பெயரில் அந்த நாடுகளுக்கு வெளியே, ஆளுமைகளின் கருத்தியலை முன்னெடுக்கும் உலகத் தமிழர்களுக்கு இதுபோன்ற மரியாதையைச் செய்து, அவர்களின் நினைவைப் போற்றவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
தான் சம்பாதித்ததில் ஒரு பகுதியை அவர் பிறந்த கானாடுகாத்தான் கிராமத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் நோக்கில் வள்ளுவர் அறிவகம் என்ற ஒரு கட்டிடத்தைக் கட்டவேண்டும் என்று சிந்தித்து அங்கு மக்கள் பயன்பெற ஏற்பாடு செய்து முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர். தமிழுக்காக உழைத்தவர்கள் உரியவர்கள் இதைப் பரிசீலித்து நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று கோருகிறேன். வாழும்போது மட்டுமல்ல, வாழ்ந்தபின்பும் தமிழுக்காக உழைத்தவர்களின் பங்களிப்புகள் போற்றப்படுவதன் வாயிலாக , பலர் வாழும் காலத்தில் ஏற்படும் பல புறக்கணிப்புகளையும், ஏமாற்றங்களையும் ஏற்று உணர்வோடு பங்களிப்புகளைச் செய்வார்கள்.
பேரன்புடன் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி , ஒருங்கிணைப்பாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஆசிரியர் "குறள் வழி" மாத இதழ் |
|||||
by Kumar on 19 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|