LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் என்னும் நூலின் வெளியீட்டு விழா 11.03.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சென்னையில் நடைபெற்றது. சென்னை, கிண்டி, கத்திபாரா சந்திப்புக்கு அருகில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கில்(AUTEAA / AUAC), இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
 
தொழிலதிபர் முனைவர் வி. ஜி. சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலினை வெளியிட்டு, சிறப்புரையாற் றினார். நூலின் முதல் படியைப் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ப. இராம முனுசாமி பெற்றுக்கொண்டார். மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் எழுந்தருளி ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன், பேராசிரியர் உலகநாயகி பழனி, முனைவர் வா. மு. சே. ஆண்டவர், புதுவை அருங்காட்சியக இயக்குநர் அ. அறிவன், பொறியாளர் தமிழ் இயலன், வலைத்தமிழ் இணைய இதழாசிரியர் ச. பார்த்தசாரதி, பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பொறியாளர் சிங்கை இளங்கோ வரவேற்புரையாற்ற, நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தமிழார்வலர்களும் தமிழறிஞர்களும் இசைத்தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் 304 பக்கம் கொண்டது. இந்த நூலின் விலை 350 இந்திய ரூபாய் ஆகும். ஒற்றை வரியில்
 
இசைத்தமிழ்க் கலைஞர்களின் சிறப்புகளை இந்த நூல் அடையாளப்படுத்துகின்றது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே, டென்மார்க்கு, பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள 5764 இசைத்தமிழ்க் கலைஞர்களின் பணிகளை இந்த நூலின் வழியாக அறிந்துகொள்ள முடியும். வாய்ப்பாட்டு அறிஞர்கள், கருவியிசை அறிஞர்கள், ஓதுவார்கள், இசையாய்வு அறிஞர்கள், இசைத்தமிழ்ப் புரவலர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் உள்ளன. இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் தேவைப்படுவோர் muetamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது + 9442029053 என்ற புலன எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.
 
தொடர்புக்கு: + 9442029053
by Swathi   on 22 Mar 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.