LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டாக்டர் சாந்தா சாந்தியடைந்தார்

டாக்டர் சாந்தா சாந்தியடைந்தார்

     சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் வி.சாந்தா உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

     மக்சேசே விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூசன் போன்ற விருதுகளைப் பெற்ற மருத்துவர் வி. சாந்தா அவர்கள் மார்ச் 11, 1927ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரின் தாய்மாமா. சென்னை மருத்துவக்கல்லூரியில் 1949ம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955ம் ஆண்டு எம்.டி. பட்டமும் பெற்றார். 1955ம் ஆண்டு அடையாறு புற்றுநோய் கழகத்தில் இணைந்த இவர் 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். மகளிர் குல திலகம் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இலட்சக்கணக்கான நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளித்து நோயாளிகளின் இதயத்தில் இடம் பிடித்தவர். நோயாளிகளுக்குச் சமைக்கப்படும் உணவையே தானும் உண்பார். திருமணம் செய்து கொள்ளாமல் இறுதிவரை நோயாளிகளின் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார். உலகில் புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவமுறைகள் எங்குக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை தன் மருத்துவமனையில் உடனுக்குடன் அறிமுகம் செய்தவர். தான் பெற்ற விருதுகள் மூலம் கிடைத்த பணத்தைக் கூட, புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவே செலவு செய்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் புற்றுநோய் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குமுவில் இடம்பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவராகவும் இருந்து சிறப்பான முறையில் பணியாற்றியவர்.

     உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த இவர் ஜனவரி 19, 2021 அன்று தன்னுடைய 93வது வயதில் காலமானார். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  

by Lakshmi G   on 20 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.