சமீபகாலமாக தமிழ் சினிமாவில், பிரபல காமெடி வசனங்களையும், ஓர் எழுத்துக்களையும், உணவுப் பெயர்களையும் தலைப்பாக வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடையே படம் பற்றிய செய்தி எளிதில் சென்று சேரவேண்டும் என்பதற்காகவே என்கின்றனர் படக்குழுவினர்.
ஒரேழுத்து தலைப்பு :
’ஆ’, ‘ர’, ‘உ’, ‘ஐ’, ‘ஈ’ என ஒரு ஓரெழுத்து தலைப்பு அதிகமாகிக் கொண்டிருக்க.
பிரபல வசனங்கள் :
‘நாங்கல்லாம் ஏடாகூடம்’, ‘இனிமே எல்லாம் அப்டிதான்’, நானும் ரௌடிதான் , நண்பேன்டா இப்படி காமெடி வசனங்களும் களம் இறங்கத் துவங்கிவிட்டன.
உணவையும் விட்டுவைக்கவில்லை :
'பீட்சா', 'பிரியாணி', 'வடகறி' படங்களுக்குப் பிறகு ‘சோன்பப்டி’, பஞ்சுமிட்டாய்’, ‘இஞ்சி முறப்பா’, ‘கமர்கட்டு’, ’ஆரஞ்சு மிட்டாய்’ என படங்களின் பெயர்களும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
|