டெட்டால் கிருமி நாசினிக்கு தென் ஆப்ரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரிமி நாசினி பாக்டீரியாக்களை முற்றிலும் அழிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பெரும்பாலான மக்கள் கிருமி நாசினியாக டெட்டாலை பயன்படுத்துகின்றனர். டெட்டால் பயன்படுத்தினால் 99.9 சதவீத பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாக, அந்நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. டெட்டால் கிருமி நாசினிக்கு தடை செய்யப்பட்டிருப்பது, குறித்து தென் ஆப்ரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறியுள்ளதாவது. பிரிட்டனில் செயல்பட்டு வரும் டெட்டால் நிறுவனம்,99.9 சதவீதம் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டதாக, விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மேலும் டெட்டால் பாட்டிலிலும், அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எங்கள் நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரத்தை சோதனையிடுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்பட்ட சோதனையில், அந்நிறுவனம் தெரிவித்துள்ளபடி, 99.9 சதவீத பாக்டீரியாக்கள் அழிக்கப்படவில்லை. இதனால், அந்நிறுவன விளம்பரங்களை நம்பி, வாடிக்கையாளர்கள் இதை உபயோகிப்பதை தடுக்கும் பொருட்டு, டெட்டால் விற்பனைக்கு, எங்கள் நாட்டில் தடை விதித்துள்ளோம்.என தென் ஆப்ரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
|