|
|||||
நடப்பு ஆண்டில் இந்தியாவில் மட்டும் 24,630 கோடி ரூபாய் இணையதளத்தின் மூலம் திருடப்பட்டுள்ளது !! |
|||||
இந்தியாவில், இணையதளம் தொடர்பான சைபர் குற்றங்களால் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான, 'சைமன்டெக்' வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
உலக அளவில், அதிக சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில், இந்தியா, முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த ஆண்டில் கடந்த பத்து மாதங்களில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய், சைபர் குற்றவாளிகளால், ஸ்வாகா செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகை கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.
24 நாடுகளை சேர்ந்த, சுமார் 13 ஆயிரம் பேர், சைபர் குற்றங்களில், தங்களின், கடினமாக சம்பாதித்த பணத்தை இழந்துள்ளனர். இவர்களில் 1,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 23 Oct 2013 0 Comments | |||||
Tags: இணையதளம் ஆன்லைன் 24 630 கோடி சைபர் இணையதள குற்றங்கள் Cyber Frauds | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|