LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஒரே ஒரு இந்தியர்கூட வசிக்காத நாடுகள்.

உலகில் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

 

 

உலகின் பல்வேறு நாடுகளில் செல்வாக்குடன் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், கண்டிப்பாக அங்கு ஒரு இந்தியரையாவது பார்க்க முடியும். ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் இந்திய மக்களைக் காண முடியும்.

 

ஆனால், ஒரு இந்தியர் கூட வாழாத நாடுகளும் இருக்கத் தான் செய்கின்றன. அந்த நாடுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

 

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வாழ்கின்றனர். அதே போல ஒரு இந்தியர் கூட வாழாத சில நாடுகளும் இருக்கின்றன.

 

வாட்டிகன் நகரம்

 

வாட்டிகன் நகரம் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் வாட்டிகன் சிட்டியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் மக்கள்தொகை மிகவும் குறைவு. ஆனால் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால். ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை.

 

இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது வேறு விஷயம்.

சான் மரினோ ஒரு குடியரசு. இதன் மக்கள் தொகை 3 லட்சத்து 35 ஆயிரத்து 620 ஆகும். இருப்பினும், இந்த மக்கள் தொகையில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை. இங்கு இந்தியர்கள் என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே பார்க்க முடியும்.

 

பல்கேரியா 

 

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியா, 2019 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 69,51,482 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த நாட்டில் இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தவிர, எந்த இந்தியரும் குடியேறவில்லை.

 

துவாலு (எல்லிஸ் தீவுகள்) 

 

உலகில் எல்லிஸ் தீவுகள் என்று துவாலு அழைக்கப்படுகிறது. இந்த நாடு ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த நாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இந்தத் தீவில் 8 கிமீ நீளச் சாலைகள் மட்டுமே உள்ளன. ஆனால் ஒரு இந்தியர் கூட அங்குக் குடியேறவில்லை.

 

பாகிஸ்தான் 

 

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் யாரும் இங்குக் குடியேறவில்லை.

இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் தூதரக அதிகாரிகள் மற்றும் கைதிகளைத் தவிர, ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாக்கிஸ்தான் பிரிக்கப்பட்ட போது பாக்கிஸ்தான் வசம் சென்ற இந்தியர்கள் மட்டுமே தற்போது அங்கு வசிக்கின்றனர்.

by Kumar   on 07 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.