வங்கதேசத்தில் தொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையும் விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.
வங்கதேசத்தில் 1920 ம் ஆண்டு ‘விலங்குகள் நலச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இது விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது.
இந்நிலையில், இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என்ற புதிய சட்டத்தை அரசு கொண்டுவர உள்ளது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது.
இதனை மீறுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விலங்குகளை இறைச்சிக்காக கொல்வது, மத சடங்குகளுக்காக பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை. இச்சட்டம், விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|