அமெரிக்கர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு அலங்காரம் செய்ய, ஆண்டுக்கு சுமார் ரூ2046 கோடி செலவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரீட்டெய்ல் பெடரேஷன் என்ற அமைப்பு பெரும்பாலான மாகாணங்களில் சர்வே ஒன்றை நடத்தியது. அமெரிக்கர்கள் வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வளர்க்கப்படுகிறதா? அப்படி எனில் அந்த வளர்ப்பு பிராணிகளுக்கான செலவு எவ்வளவு என்பதே அந்த சர்வேயின் விவரம். இதில் பல அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்தன. இதன்படி
அமெரிக்கர்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் நாய், பூனை, பறவைகள் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இதில் பெரும்பாளான மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அலங்காரம் செய்து அழைத்துச்செல்ல விரும்புகின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு 330 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்புக்கு ரூ2046 கோடி) தொகையை செலவிடுகின்றனர். இந்த நாய்களுக்கு தினமும் அசைவ உணவு, வாராந்திர மருத்துவ பரிசோதனை, நாய் தங்குவதற்கான குடில், நாய்களுக்கு உடை, கிளவுஸ், கண்ணாடி, நாய்களுக்கான பிரத்யேக பிஸ்கட் வகைகளுக்கு இந்த தொகை செலவிடப்படுகிறது. இன்னும் சிலர் வாராவாரம் தங்களது நாய்களை பியூட்டி பார்லருக்கும் அழைத்து செல்கிறார்களாம். 17 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
|