LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆடம்பர விழாக்கள் நடத்திய அதிகாரிகளுக்கு சீனா அரசு தண்டனை !!

ஆடம்பரமாக அரசு விழாக்களை நடத்தியதாகவும், விழா விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 20,000 அரசு அதிகாரிகள் கடந்தாண்டு தண்டிக்கப் பட்டுள்ளதாக சீன அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

சீன அதிபராக ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் நாட்டில் நிலவிய அதிகாரிகளின் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் மற்றும் ஊதாரித்தனம் குறித்து களை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக அரசு விழாக்கள் குறைக்கப்படவேண்டும் என்றும், வரவேற்பு விழாக்கள் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்றும், அதிகாரிகள் தங்களின் அர்த்தமற்ற பேச்சுகளைக் கைவிடவேண்டும் என்றும் அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டார். 

 

அதிபரின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு மற்றும் ஒழுக்கம் குறித்து ஆய்வு செய்யும் மத்தியக் குழு இந்த விதிமுறைகளை மீறிய அதிகாரிகளுக்கு அலுவலக அளவிலோ அல்லது உட்கட்சி அளவிலோ தண்டனைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தது. ஆனால் தண்டனை பெற்றவர்களின் விபரங்களை அரசு வெளியிடவில்லை. ஆனால், இணையத்தள தகவல் ஒன்றில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களது அலுவலக கார்களை பயன்படுத்தியதிலும், 903 அதிகாரிகள் விரிவான கொண்டாட்ட விழாக்களை ஏற்பாடு செய்ததிலும் விதிமுறைகளை மீறியதாக இந்தக் குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சென்ற ஆண்டு மட்டும் ஆடம்பரமாகவும், விழாக்கள் குறித்த விதிமுறைகளை மீறியதற்காகவும் கிட்டத்தட்ட 20,000 அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 03 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.