சீனாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீனாவில் உள்ள கான்சு மாகாணத்தில் நேற்று காலை 8:00 மணியளவில், இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 6.6 மற்றும் 5.6 என பதிவான இந்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 89க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க சீன ராணுவம் முழுவீச்சில் களம் இறகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 160 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|