சிரியாவில், போராட்டக்காரர்கள் மீது ரசாயன ஆயுதங்கள், பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக, ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சிரியாவில் கடந்த மாதம் 21-ம் தேதி அதிபர் ஆசாத் படையினர் விஷக்குண்டுகளை வீசி போராட்டகார்கள் 1429 பேரை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, ஐ.நா. ஆய்வாளர்கள் சிரியாவில் ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு அறிக்கையை ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் நேற்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் சமர்பித்தார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சிரியாவில் கடந்த மாதம் அதிபர் ஆசாத் படைக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அப்போது சரின் என்ற விஷவாயு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சுற்றுச்சூழல், ரசாயன மற்றும் மருத்துவ மாதிரிகளுடன் தெளிவான மற்றும் நம்பத்தகுந்த ஆதரங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் சேகரித்து இருக்கிறார்கள். சரின் என்ற இந்த விஷவாயு நரம்புகளை பாதித்ததால் குழந்தைகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த ஆயுதங்களை பயன்படுத்தியது யார் என்பது பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
|