LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது!

கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வுக்கு தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு தனது அகழாய்வினை கடந்த 2015-ல் தொடங்கியது. இதில் கிடைத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில்  கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இவை என தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து, 2017 ஜனவரியில் 2-ம் கட்ட ஆய்வு தொடங்கப் பட்டது.  இதில் சுமார் 6 ஆயிரம் தொல்பொருட்களின் மாதிரிகள் கிடைத்தன. இவை அனைத்தும் சென்னை மற்றும் பெங்களூர் தொல்லியல் துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் 3- ம் கட்ட ஆய்வு நிறுத்தப்பட்டு இந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வேண்டும் என பல்வேறு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, 3- ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் நடைபெறும் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது. ராம் என்பவர் தலைமையில் ஆய்வு தொடர்ந்தது. அவரும் அறிக்கையை சமர்பித்தார். 

4- ம் கட்ட ஆய்வை மேற்கொள்ள நிதியில்லை என மத்திய அரசு காரணம் காட்டியது. இதனையடுத்து தமிழகத் தொல்லியல் துறை அதனைக் கையில் எடுத்தது. இந்தப் பணிக்குக் கண்காணிப்பாளராக தமிழகத் தொல்லியல் துறையின் சிவானந்தம் நியமிக்கப்பட்டார். அவரும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தார். 

இந்த நிலையில் தான் அடுத்த கட்ட ஆய்வை மேற்கொள்ளத் தமிழக அரசு சார்பில் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. 5-ம் கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதத்தில் அனுமதி அளித்தது.

மக்களவையின் கேள்வி நேரத்தில், தஞ்சை தொகுதி அ.தி.மு.க எம்.பி., கே.பரசுராமன், "கீழடி அகழாய்வுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் கார்பன் பகுப்பாய்வில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் எந்த காலத்தைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளதா" என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

மேலும், கீழடி அகழாய்வுக்கு அரசு எடுத்து உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி கேட்டு இருந்தார்.

இந்தக் கேள்விக்கு  பதில் அளித்த மத்திய கலாசாரத் துறை துறை அமைச்சர் மகேஷ் சர்மா, `கீழடி அகழாய்வுக்கு 2015- 2016 நிதியாண்டில் 50 லட்சமும், 2016- 2017 நிதியாண்டில் ரூ.44.50 லட்சமும், 2017 -2018 நிதியாண்டில் ரூ.23.65 லட்சமும்  தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் 2017 -2018 நிதியாண்டில் ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. 

கீழடியில் கிடைத்த பொருட்களை கார்பன் பகுப்பாய்வு செய்ததில் அவை கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. கீழடியில் 2018-19 ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளத் தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

by Mani Bharathi   on 06 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.