LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

எச்4 விசா ரத்து செய்வது குறித்து அமெரிக்க மக்களிடம் கருத்து கேட்க அதிபர் டிரம்ப் முடிவு!

எச்4 விசாவை ஜனவரியில் இருந்து ரத்து செய்யும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், இது பற்றி மக்களிடம் கருத்து கேட்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். 

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணியாற்ற வெளிநாட்டவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை அதிகளவில் பெறுபவர்கள் இந்திய ஐடி ஊழியர்களே. 

எச்1பி விசாவால் அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு, எச்1பி விசா  நடைமுறையில் பல்வேறு கெடுபிடி விதிமுறைகளை வகுத்தார்.

இதை எதிர்த்து முன்னணி ஐடி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த நிலையில், கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘கேம்பிடி அமெரிக்கா’, உள்துறை அமைச்சர் கிறிஸ்ட்ஜன் நீல்சன், அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற சேவை இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில், ‘எச்1பி விசா நடைமுறையில் 3 முக்கிய மாற்றங்களை தற்போதைய அரசு மேற்கொண்டு உள்ளது. அரசு வகுத்த விதிமுறையை குடியேற்றத் துறையே மீறி செயல்படுகிறது. பல்வேறு காரணங்களை காட்டி, இந்த விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைப்பது கணிசமாக அதிகரித்து வருகிறது.

 அரசின் விதிமுறைகளில் நிலையான தெளிவான விளக்கங்கள் இல்லாததால் குழப்பநிலை ஏற்படுகிறது. எனவே, திறமை வாய்ந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு பணியாளர்களை அமர்த்தும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் கல்வி உள்ளிட்ட பல்வேறு தகுதியின் அடிப்படையில், அமெரிக்காவில் 65,000 பேருக்கு மட்டுமே எச்1பி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எச்1பி விசா பெற்றவர்களுடன் செல்லும் கணவன் அல்லது மனைவி, அமெரிக்காவில் பணியாற்றவும், தொழில் செய்யவும் எச்4 விசா வழங்கப்பட்டு வருவதை அடுத்த ஆண்டு ஜனவரியில் ரத்து செய்யப் போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

 இதனால், எச்4 விசா பெற்ற 70 ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கும் ஐடி நிறுவனங்கள், அமெரிக்க எம்பி.க்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், எச்4 விசா ரத்து செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு பின்னர் முடிவு செய்வதாக டிரம்ப் நிர்வாகம் எம்பி.க்களிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் உறுதி அளித்துள்ளது.

by Mani Bharathi   on 10 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.